தேவையானவை:
- காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந் நீரில் போட்டு எடுக்கவும்),
- பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
- தக்காளி – 1,
- வெங்காயம் – 1,
- பச்சை மிளகாய்,
- தேங்காய் துண்டுகள் – தலா 2,
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
- தனியாத்தூள்,
- இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன்,
- பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன்,
- சீரகம் – ஒரு டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள்– தேவையான அளவு,
- எண்ணெய்– தேவையான அளவு,
- உப்பு – தேவையான அளவு.
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment