தேவையானவை:
- புழுங்கல் அரிசி - ஒரு கப்,
- பச்சரிசி - அரை கப்,
- வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்,
- கொடியாக இருக்கும் முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி,
- இஞ்சி - சிறு துண்டு,
- பெருங்காயத்தூள் - சிறிது,
- பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி பாசிப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும். எல்லா மாவையும் சேர்த்து கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
No comments:
Post a Comment