தேவையானவை:
- பாசிப்பருப்பு - ஒரு கப்,
- பச்சரிசி - கால் கப்,
- பச்சைமிளகாய் - 3 அல்லது 4,
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்),
- இஞ்சி - சிறு துண்டு,
- மல்லித்தழை - கால் கப்,
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் களைந்து 3 மணி நேரம் ஊற விடவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து மாவைக் கலந்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக எடுக்கவும்.
நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.

No comments:
Post a Comment